ஒரு நாள்
நள்ளிரவுத் தூக்கம் தூக்கத்துல கனவு
கனவுல அவ வந்தா தூக்கமும் கனவாகும்
கனவு கலைய தூக்கம் தெளிய காலை மணி எட்டாகும்
குளிச்சும் குளிக்காம வந்து
வளிச்சிக்குட்டு நிப்பேன் தலைய - பின்னே
சாப்பிட்டும் சாப்பிடாம காலேஜ் வந்து நின்னா
கண்களும் தேடும் நாலுபுறம் - அவள
க்ளாஸ ஒரு உருட்டு உருட்டி நிமிஷத்துக்கு
பத்துதரம் உத்து உத்து பார்த்தா
காதோர அழகுமுடி மறச்சு நின்னு ஆடும்
- கண்ண பாக்க விடாம
காத்துல அந்த முடி ஒதுங்குமா ஒதுங்காதானு
எதிர்பார்த்துக் காத்துருந்தா முடிஞ்சுபோகும் - ஒரு நாளே...!
( நண்பன் காளியின் டைரியிலிருந்து )