Thursday, January 30, 2014

மாணவர்களின் போராட்டங்களும் ஆதரவும்


இவை அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துகளே,யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல)












யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்,கல்லூரிகளில்  மிகவும் சந்தோசமாக சுதந்திரமாக விளையாட்டுத்தனமும் குறும்பும் நிறைந்த மாணவர்கள்

வீதிக்கு வந்து போராடி ஐ நா சபையயே திரும்பச்செய்வார்கள் என்று.ஆம் 50 வருடங்களுக்கு முன்னர் இந்தி மொழியை விரட்டுவதற்காக வீதிக்கு வந்த மானவர்கள் இன்று தமிழீழம் அமைய செய்வதற்கு மீண்டும் வீதிக்கு வந்திருக்கிறார்கள்.




சென்னை நந்தனம் கல்லூரியில் சிறு பொறியாய் தொடங்கிய வேள்வித்தீ இன்று தமிழ் மக்கள் அனைவரயும் திரும்பிபார்க்க வைத்துள்ளது.சட்டக்கலூரி,கலைக்கல்லூரி,அறிவியல் கல்லூரி,பொறியியல் கல்லூரி,மருத்துவ கல்லூரி என்று படிப்படியாக மொத்த மாணவர்களையும் களத்தில் இறங்கச் செய்தது அச்சிறு பொறி.ஏடு தூக்கும் கைகள் எதிர்ப்பு பதாகைகளை தூக்கிக்கொண்டு வீரத்துடனும்,விவேகத்துடனும் போராட ஆரம்பித்து தொடர்ந்து போராடியும் வருகிறது.இந்தப்போரட்டங்களுக்கு மகுடம் வைத்தார் பொல மக்களும் களத்தில் இறங்க அனைத்து அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்த்து இதை தங்களுக்கு சாதகமாக்க முயன்றன.அசரவில்லை மாணவர்கள்,எந்த அரசியல் நாடகங்களையும் அனுமதிக்க வில்லை.


மிரட்டி பணிய வைக்கலாம் என்று கல்லூரி நிர்வாகங்களும்,ஒரு வாரத்தில் அடங்கிவிடும் என்று அரசாங்கமும் நினைத்தன,ஆனால் நடந்தது வேறு.பொறுத்தது போதும் என்று கைது நடவடிக்கைகள் தொடர்ந்தது.கைதுக்கும் பயப்படவில்லை நம் காளையர்கள்.வேறு வழி இல்லாமல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டார்கள்.போராட்டம் தொடர்ந்தது கைதாட்டம் தீவிரமடைந்தது.தங்கள் கல்வியையே பணையம் வைத்தனர் மாணவர்கள்.




ஆனால் இந்த போராட்டங்களுக்கு கிடைத்த பரிசு ?????????
தோல்வி! மிகப்பெறும் தோல்வி! ஆம் மத்திய மாநில அரசுகளில் இருந்து ஒரு ஈ காகம் கூட எட்டிப்பார்க்கவில்லை.ஒரே ஆறுதலாக திமு கழகம் மத்திய அரசிலிருந்து விலகியது,சட்டப்பேரவையில் தீர்மானம், நீர்த்துப்போன அமெரிக்கத்தீர்மானம் வெற்றி.


இனியும் இதே நிலைதான் நீடிக்கும்.எனவே மாணவர்களின் போராட்ட முறை மாற வேண்டும் கல்விக்கும் ஆபத்து வரக்கூடாது.புது முறை போராட்டம் வெடிக்க வேண்டும்.தொடர்ந்து படிக்கவும் வேண்டும் போராடவும் வேண்டும் அற வழியில்!






இந்தபோராட்டங்களில் சில வேடிக்கைகளும் நிகழ்ந்தன.சட்டக்கல்லூரி மாணவர்களூம் கலை அற்வியல் கல்லூரி மாணவர்களும் உண்ணா விரதம் சாலை மறியல் பேருந்து மறியல் ரயில் மறியல் வகுப்பு புறக்கணிப்பு என்று போராடினர்,பொறியியல் கல்லூரி மாணவர்கள் சற்று தாமதமாகத்தான் ஆரம்பித்தனர்.அதுவும் பெறிய அளவில் நிகழவில்லை.அதிலும் சில கல்லூரிகள் சட்டையில் கறுப்புப்பட்டை அணிந்து? வாயில் துணி கட்டி ,கண் கட்டிக்கொண்டு ,உருவ பொம்மை எரிப்பு என பலத‌ரப்பட்ட போரட்டங்களும் நடந்து வருகிறது.



இந்தி எதிர்ப்பில் சாதித்தோம்!  இலங்கை பிரச்சனையில் ஏன் முடியாது?



முயன்று பார் ராஜபக்சஸே என்ன அவன் அப்பனையே காலில் விழச்செய்யலாம்.அதற்கு தேவை மாணவ ஒற்றுமையும்,மான ஒற்றுமையும் தான்.

நாம் வீழும் போது நம்மவர்களுக்கு ஒரு நாடு! அதை நாடும் வரை நாமும் வீழோம் நம் தமிழும் வீழாது !வாழ்க தமிழ்!

(இது ஒரு மீள் பதிவு, பதிவு எழுதப்பட்ட நாள்; 28-03-2013 என்னுடைய வலைப்பக்கத்திற்காக முன்னர் எழுதியது..)

Wednesday, January 29, 2014

இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது!


இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது!


எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தலைப்பு இது தான். பட்டிமன்றத்திற்கு நடுவராக புலமை முதல்வர் அவர்கள் வீற்றிருந்தார். பட்டிமன்றத்தின் தீர்ப்பை கடைசியில் தருகிறேன். இனி நான் பேசியவை.....











அனைவருக்கும் வணக்கம்! நடுவர் பெருந்தகைக்கும் அனைவருக்கும் என்னுடைய குடியரசு தின வாழ்த்துகளும் வணக்கங்களும்! ஆம் இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது! குறைந்து வரவில்லை கரைந்து வருகிறது என்று கூட சொல்லலாம்.

போற்றூவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வோம் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்‍---=______ பாரதிதாசன்.

நான் பயப்பட மாட்டேன் இப்படிக்கூறுவதற்கு. இன்றைய இளைஞர்களின் தேசப்பற்றுக்கு  இங்கு வருகை தந்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையே உதாரணம். 

மேலும் இன்றைய தேசப்பற்று இப்படித்தான் இருக்கிறது. முகப்புத்தகத்தில் குடியரசு தின வாழ்த்து என நிலைத்தகவல் பதிவேற்றுவதிலும் அதற்கு லைக் பெறுவதிலும் தான் இருக்கிறது.உண்மையா இல்லையா நடுவர் அவர்களே? 

படை வலிமையிலும் அணுக்கருவி படைப்பிலும் அமெரிக்கா,ர‌ஸ்யா,பிரிட்டன்,பிரான்ஸ்,சீனா ஆகிய 5 பெறும் வல்லரசுகளுக்கு இணையாக வளர்ந்து நிற்கிற‌து இந்தியா. ஆனால் பொருளாதாரத்தில் மட்டும் வளர்சி கை கூடமுடியாமல் தவிக்கிறோம். இதற்கு நாமும் சிறிய அளவு காரணம் என்று நினைக்கும் போது ஏமாற்றமாக உள்ளது. ஆம் இன்றைய இளைஞர்களின் விருப்ப பானம் பெப்ஸி. தலைக்கு தேய்க்கும் சாம்பு முதல் காலில் அணியும் செருப்பு வரை பெரும்பாலும் அந்நிய பொருட்களே. பிறகெப்படி உள் நாட்டுப் பொருளதாரம் வளர்ச்சி அடையும். இவை நாட்டுப்பற்றுள்ளவன் செய்யும் செயல்களா?





இந்திய அரசாங்கத்தின் செலவுகளிலும்,சலுகைகளிலும் படிக்கும் பெரும்பாலனவர்கள் தேடி ஓடுவது வெளிநாடுகளைத்தானே! கேட்டால் வேலைவாய்ப்புகளில்லை என்ற சப்பு காரணங்கள்.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்! ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்! ஒழுங்காய் பாடுபடு வயல்க்காட்டில்! உன் புகழ் உயரும் அயல் நாட்டில்! என்று பாடிய பட்டுக்கோட்டையாரின் நாட்டிலே வாழ்ந்து கொண்டு இப்படிக்கூறலாமா? 

நான்கு பேர் நிற்கும் இடத்தில் நாட்டைப்பற்றிப் பேசினால் காத தூரம் ஓடுபவர்கள் தான் இன்றைய இளைஞர்கள்! இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவின் வரலாறு தெரிவதில்லை, பொருளாதாரம் தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லம் அரியர் கிளியர் செய்வது, நாலு பொண்ணுங்கள சைட் அடிக்கிறது,வேலைக்கு போறது,சம்பாதித்து செட்டில் ஆவது, இவை மட்டும் தான் நடுவர் அவர்களே!

                                            

தேசப்பற்று என்பது என்ன ?

  தமிழ் சினிமாக்களில் அர்ஜுனும்,விஜயகாந்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டுவது மட்டும் தேசப்பற்றாகாது,
இந்தியாவின் மலைகளையும் எல்லைகளையும் நேசிப்பது மட்டும் தேசப்பற்றாகாது,இந்திய ஏவுகணைகள் விண்ணில் ஏவப்படும் போது அதை நினைத்துப் பார்ப்பது மட்டும் தேசப்பற்றாகாது,ஏ.ஆர் ரகுமான் 2 ஆஸ்கார் விருதை கையில் வாங்கி எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று தமிழில் கூறியதை நினைத்து புலங்கிதம் அடைவது மட்டும் தேசப்பற்றாகாது.இவை எல்லவற்றுக்கும் மேலாக,

சிதம்பரம் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடக்கூடாது எனும் மொழித்தீண்டாமையை தரியமாக எதிர்த்துப் பேசுவதுதான் உண்மையான தேசப்பற்று.


ஒரிஸ்ஸாவிலும்,குஜரத்திலும் சிறுபான்மையினர் அநியாயமாக கொல்லப்படும் போது தட்டிக்கேட்பதுதான் உண்மையான தேசப்பற்று.


சாதி மறுத்து திருமணம் செய்பவர்களை சாதி வெறியர்கள் ஈவு எரக்கம் இன்றி கொல்வதை எதிர்த்துக்க் கேட்பது தான் உண்மையான தேசப்பற்று.

பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் போது அதை எதிர்த்துக் கேட்பதுதான் உண்மையான தேசப்பற்று.

இவைகளில் ஒன்றையாவது நாம் செய்திருக்கிறோமா? பிறகெப்படி தேசப்பற்று வளர்கிறது என்று சொல்லமுடியும் நடுவர் அவர்களே!


காஸ்மீர் இந்த்யாவிற்குச் சொந்தம் என்று நினைக்கும் எத்தனை இளைஞர்க பாகிஸ்தானமும் இந்தியாவினுடையது என்று நினைத்டிருப்பீர்கள். காலம் காலமாக நாம் இருவரும் எதிரி நாடுகள் என்று சொல்லியே வளர்க்கப்பட்டுள்ளோம்.

காலம் கடந்துவிடவில்லை! நேரம் முடிந்துவிடவில்லை! இனிமேலாவது இளைஞர்கள் விழித்துக்கொண்டு "இளைய ரத்தம் என்ன போலியா? எழுத வேன்டும் புதிய இந்தியா"  எனும் கூற்றை உண்மையாக்கப் பாடுபடவேண்டும்.
அதுவரை இளைஞர்களிடம் நாட்டுப்பற்று வளராது குறையும்!குறையும்!  குறையும்!


எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்! வாழ்க த‌மிழ்! வளர்க பாரதம்!



இறுதியில்  இன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைவது போல தோன்றினாலும் தேசப்பற்று ஒருபோதும் குறையாது! வளர்ந்தது! வளர்கிறது! வளரும்! என்று நடுவராய் வீற்றிருந்த புலமை முதல்வர் அவர்கள் தீர்ப்பு வளங்கினார்.